சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்க நாளை (01) இரண்டு பேரணிகளில் கலந்து கொள்ள உள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தினப் பேரணி நாளை (01) காலை 10.00 மணிக்கு கொட்டகலை பொது விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளதுடன், ரணில் விக்ரமசிங்க அதில் முதலில் கலந்துகொள்ள உள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பின் பேரில்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பின் பேரில் அதிபர் இதில் கலந்துகொள்ளவுள்ளதுடன் பெருந்தோட்டத்தைச் சேர்ந்த பெருந்தொகையான மக்களின் பங்குபற்றுதலுடன் மே தின பேரணி இடம்பெறவுள்ளது.
மலையக சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப்பெரிய தொழிற்சங்கம் மற்றும் அரசியல் கட்சி இலங்கை தொழிலாளர் காங்கிரஸாகும்.
மேதின பேரணிகளில் ஆளில்லா விமானம் : காவல்துறை விடுத்துள்ள அறிவிப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினபேரணி
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினபேரணி நாளை (01) பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு மாளிகாவத்தை காவல்துறை முன்பாக ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.
அதிபர் தேர்தல் : ஆதரவு தளத்தில் அனுரவை முந்தும் சஜித்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |