உக்ரைனின்(ukraine) சுமி நகரத்தை குறிவைத்து ரஷ்யா(russia) இன்று (13) ஞாயிற்றுக்கிழமை நடத்திய பலஸ்டிக் ஏவுகணை தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டதுடன் 07 சிறுவர்கள் உட்பட 83 பேர் படுகாயமடைந்துள்ளதாக உக்ரைன் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உயிரிழப்பு எண்ணிக்கை “முதற்கட்ட தரவுகளின்படி” இருப்பதாகவும், மக்கள் “தெருவின் நடுவில், கார்களில், பொது போக்குவரத்தில், வீடுகளில்” காயமடைந்துள்ளதாகவும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலகத்திற்கு உக்ரைன் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை
ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு உலகம் உறுதியாக பதிலளிக்க வேண்டுமெனஉக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky)தெரிவித்துள்ளார்.
“ஒரு பயங்கரவாதிக்கு தகுதியான ரஷ்யா மீதான அணுகுமுறை தேவை” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்ய ஏவுகணை “ஒரு சாதாரண நகரத் தெருவை, சாதாரண வாழ்க்கையை: வீடுகள், கல்வி நிறுவனங்கள், தெருவில் உள்ள கார்கள்” என்று தாக்கியதாகவும், இப்போது மீட்பு நடவடிக்கை நடந்து வருவதாகவும் கூறினார்.