முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிசுவை இழந்த தாயின் குமுறல்

கீத பொன்கலன்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் பிரசவத்தின்போது தனது குழந்தை உயிரிழந்தமைக்கு வைத்தியர்களின் கவனக்குறைவே காரணம் எனத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

 

திருகோணமலையைச் சேர்ந்த குறித்த தாய், கடந்த ஏப்ரல் மாதம் 09-ஆம் திகதி பிரசவத்திற்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதன்போது பிரசவம் நடைபெற்ற நிலையில், குழந்தை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்துத் திருகோணமலை துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ள தாயார், அங்கு கடமையிலிருந்த வைத்தியர்களின் பாரிய கவனக்குறைவு காரணமாகவே தனது குழந்தை உயிரிழந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். உரிய நேரத்தில் முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை என்பதே அவரது பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.

பாதிக்கப்பட்ட தாயாரினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து, திருகோணமலை துறைமுகப் பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வைத்தியசாலை தரப்பில் நிலவியதாகக் கூறப்படும் கவனக்குறைவு குறித்துத் துறைசார் விசாரணைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரசவத்தின்போது சிசு உயிரிழந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், மருத்துவச் சேவைகள் குறித்த அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Source: https://www.tamilmirror.lk/video/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D/52-377061

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.