திருகோணமலையில் உள்ள சுற்றுளாத்தளத்தில் நிலாவெளி கடற்கரையும் தேசிய பூங்காவான புறாத்தீவும் பிரதான இடத்தை பிடித்துள்ளது.
தினமும் உள்நாட்டு,வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அங்கு சென்று
வருகின்றனர். தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகை இங்கு அதிகமாக காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.
குறித்த நிலாவெளி கடலில் நீராடி சுதந்திரமாக தங்கள் பொழுது போக்கை மகிழ்ச்சியுடன் கழிக்கின்றனர்.
அங்கிருந்து கடல் மார்க்கமாக பயணித்து பார்க்க வேண்டிய தேசிய பூங்காக்களில் ஒன்றாக புறாத் தீவும் முக்கியம் பெற்று விளங்குகிறது.
வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குறித்த தீவை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர்.
குறித்த தீவுக்கு செவ்வாயின் படகு மூலமாக பயணிக்க வேண்டியுள்ளதால் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினால் அமைக்கப்பட்ட பகுதியில் அனுமதிக்கான படகு கட்டணமாக ரூபா 8000 செலுத்தி டிக்கட்டை பெறவேண்டும். ஒரு படகில் ஏழு நபர்கள் மாத்திரமே பயணிக்க முடியும்.
இவ்வாறான தேசிய பூங்கா ஊடாக அதிக இலாபம் ஈட்டக்கூடியதாகவும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் அங்கு செல்வதனாலும் அந்நியச் செலவாணிக்கு பெரிதும் குறித்த சுற்றுலா தளம் பெரிதும் பங்காற்றி வருகிறது.
பயணிகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் பிரிவின் உயிர் பாதுகாப்பு படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source: https://samugammedia.com/trincomalee-attracts-tourists—the-famous-nilaveli—pigeon-island-1782821433

