மெகசின் சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்குப் போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களைப் பிரத்தியேகப் பொதிகள் மூலம் கடத்த முயன்ற இருவரை பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
இன்று நண்பகல் வேளையில், கொழும்பு பேஸ்லைன் வீதியில் அமைந்துள்ள மெகசின் சிறைச்சாலையின் பக்கவாட்டுச் சுவருக்கு வெளிப்புறமாகச் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இருவரை இலக்குவைத்து பொலிஸார் இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
சிறைச்சாலையின் பாதுகாப்புச் சுவருக்கு மேலாக இரண்டு பொதிகளை உட்புறமாக வீசுவதற்கு இவர்கள் முயன்றபோதே, அங்கு மறைந்திருந்த பொலிஸாரால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 02 பொதிகளையும் சோதனையிட்டபோது, அவற்றில் கைதிகளுக்கு வழங்குவதற்காகத் தயார்படுத்தப்பட்டிருந்த பின்வரும் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன:
‘ஐஸ்’ போதைப்பொருள்: 22 கிராம் 250 மில்லிகிராம்,’ஹேஷ்’ போதைப்பொருள்: 02 மில்லிகிராம்
சிறிய ரக செல்பேசிகள்: 02, சார்ஜர்கள்: 02, லைட்டர்கள்: 10,காதணிகள்: 02 ஜோடிகள் ஆகும்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Source: https://samugammedia.com/attempt-to-throw-drugs-into-magazine-prison-two-arrested-1786201677

