மட்டக்களப்பு- ஓட்டமாவடி பிரதேச சபைக்கான உள்ளூராட்சி தேர்தலுக்கான
முதலாவது வேட்புமனு இன்று (18) பிற்பகல் சுயேச்சை குழு
ஒன்றினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல்
அலுவலகத்தில் இந்த வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கட்டுப்பணம்
இந்தநிலையில், நேற்று (17) எட்டு அரசியல் கட்சிகளும் 7 சுயேச்சை
குழுக்களும் தமக்கான கட்டுப்பணங்களை செலுத்தியுள்ளன.
இதேவேளை, தேர்தலில் போட்டியிடுவதற்காக 15 அரசியல் கட்சிகளும் 22 சுயேட்சைக்
குழுக்களும் தமக்கான கட்டுப்பணங்களை செலுத்தி இருக்கின்றனர்.