15 நிமிடங்களில் எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் எண்ணி எடுத்துக் கொள்ளலாம் என சீன (china)நிறுவனமொன்று தனது ஊழியர்களுக்கு அறிவித்த நிலையில் ஊழியர்கள் பணத்தை வேகமாக எண்ணி எடுத்த காணொளி வைரலாகி வருகிறது.
சீன நிறுவனமான ஹெனான் மைன் கிரேன் வருடாந்த போனஸ் கொடுப்பனவில் இந்த வித்தியாசமான முயற்சியை செய்தது.
15 நிமிடங்களில் எண்ணக்கூடிய அனைத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று நிறுவனம் ஊழியர்களுக்கு ரூ.70 கோடியை மேசையில் வைத்தது.
15 நிமிடங்களில் எவ்வளவு பணத்தையும் எண்ணி எடுக்கலாம்
நிறுவனம் 60-70 மீட்டர் நீளமுள்ள மேஜையில் பணத்தை அடுக்கி வைத்து, ஊழியர்களை 30 பேர் கொண்ட குழுக்களாகப் பிரித்து பணத்தை எண்ணுமாறு கேட்டுக்கொண்டது.
பிறகு, ஊழியர்கள் 15 நிமிடங்களுக்குள் எவ்வளவு பணம் எடுக்க முடியுமோ அவ்வளவு பணம் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இதனால் ஊழியர்கள் சிலர் எதிர்பார்த்த அளவுக்கு போனஸ் சம்பாதிக்க வாய்ப்பு கிடைத்தது.
போட்டி வேகமாக இருந்தது, ஒவ்வொரு ஊழியரும் விரைவாக பணத்தைப் பிடுங்கி எண்ணத் தொடங்கினர்.
சமூக வலை தளங்களில் வைரலான காணொளி
ஒரு ஊழியர் 15 நிமிடங்களில் 100,000 யுவான் (சுமார் S$18,700) வரை எண்ணி எடுத்தார். அவர்கள் எடுத்த பணம் அவர்களுக்கே வழங்கப்பட்டது. இதன்காணொளி இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலானது.
View this post on Instagram