முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழ் மக்கள் முன்னிலையில் பிள்ளையானுக்கு எதிராக சஜித் வழங்கிய வாக்குறுதி

எனது அரசாட்சியில் ஈஸ்டர் குண்டு வெடிப்புடன் தொடர்புடைய பிள்ளையான் (pillaiyan) போன்ற கொலையாளிகள் கைது செய்யப்படுவார்களென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட இலங்கை (Sri Lanka) தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) தலைமையில் களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருக்கும் இலங்கை தமிழரசுக்கட்சியின் மாவட்ட , தொகுதி, பிரதேச, கிராமிய குழு உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், மத்திய குழு உறுப்பினர்கள், மாவட்ட இளைஞர் அணி மற்றும் மக்கள் அணியுடனான விசேட கலந்துரையாடல் நேற்று (15) இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

பிரதான சூத்திரதாரி

இந்தநிலையில், களுதாவளை விளையாட்டு மைதானத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்த ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் களுதாவளை கிராமிய குழு தலைவர் பார்த்தீபன் வரவேற்று , பின்னர் களுதாவளை கல்லடி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ் மக்கள் முன்னிலையில் பிள்ளையானுக்கு எதிராக சஜித் வழங்கிய வாக்குறுதி | Sajith Promises Arrest Pillaiyan For Easter Attack

இதையடுத்து, குறித்த கூட்டத்தில் கருத்து தெரிவித்த இரா.சாணக்கியன், “மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர் பிரச்சினைக்கான தீர்வினையும் , அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான தீர்வினையும் , ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான பிரதான சூத்திரதாரியினையும் , அதனோடு தொடர்புடைய சகலரையும் கைது செய்து நீதியை நிலைநாட்டுவதோடு , பிள்ளையான் போன்ற கொலையாளிகளும் கைது செய்ய வேண்டும்.

நிரந்தரமான அரசியல்

வாகரை இல்மைற் அகழ்வுடன் தொடர்புடைய காணி திருடர்கள் மற்றும் சட்டவிரோத மண் கடத்தல் கார கும்பல் உட்பட பல கள்வர்கள் மட்டக்களப்பிலிருந்து அகற்றப்படுவதோடு இவ்வாறான விசமிகள் கைது செய்யப்பட வேண்டும்.

தமிழ் மக்கள் முன்னிலையில் பிள்ளையானுக்கு எதிராக சஜித் வழங்கிய வாக்குறுதி | Sajith Promises Arrest Pillaiyan For Easter Attack

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூடி ஏகமனதாக தீர்மானித்து ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, இவ்வாறான மட்டக்களப்பு மற்றும் அம்பாறை (Amparai) உட்பட அனைத்து பிரதேசங்களிலும் குறிப்பாக வடக்கு கிழக்கில் காணப்படும் தமிழர்களுக்கான நிரந்தரமான அரசியல் தீர்வையும் இவ்வாறான கொலையாளிகள் கள்வர்கள் மற்றும் சாணக்கியன் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் தமது அரசாட்சியில் இதற்கான நீதி நிலைநாட்டப்படும் என உறுதியளித்துள்ளார்.

தமிழரசுக் கட்சி

அதனையும் தாண்டி குறிப்பாக நல்லாட்சிய அரசாங்க காலப்பகுதியில் தான் அமைச்சராக கடமையை ஏற்று இருந்த காலப்பகுதியில் முடிக்கப்படாமல் இருக்கின்ற அனைத்து வீட்டுதிட்ட வேலைகள் அனைத்தும் ஒரு மாத கால பகுதிக்குள் நிறைவுறுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் முன்னிலையில் பிள்ளையானுக்கு எதிராக சஜித் வழங்கிய வாக்குறுதி | Sajith Promises Arrest Pillaiyan For Easter Attack

இந்தநிகழ்வில், அம்பாறையில் மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் உடைய நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் (Kalaiyarasan), மட்டக்களப்பு மாவட்ட மாநகர சபை முதல்வர் சரவணபவன் (Saravanabhavan), இலங்கையில் தமிழரசு கட்சியினுடைய மாவட்ட , தொகுதி, மத்திய , பிரதேச , கிராமிய குழு உறுப்பினர்கள் இலங்கை தமிழரசுக் கட்சியின் உடைய மட்டக்களப்பு மாவட்ட இளைஞரணி, மகளிர் அணி பிரதிநிதிகள் மற்றும் இலங்கை தமிழர் கட்சியினுடைய ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும், இதன் போது கருத்து தெரிவித்த இலங்கை தமிழரசுக்கட்சியின் ஆதரவாளர்கள் , கட்சியின் தீர்மானித்திற்கு அமைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக உழைப்பாதாகவும் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.