முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இரட்டை வேடம் போடும் மாவை! சஜித்திற்கு ஆதரவு என அறிக்கை – பொது வேட்பாளருக்கு பிரசாரம்

தமிழர்களின் இட்சியத்துக்கான எழுச்சியை வெளிப்படுத்தும் வகையில் உங்களது வாக்குகளை அளிக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் (ITAK) தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா (Mavai Senathirajah) தெரிவித்துள்ளார்.

தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனை (P. Ariyanethiran ) ஆதரித்து சிவஞானம் சிறீதரனின் (S. Shritharan) ஏற்பாட்டில்  நேற்று (16) நடைபெற்ற ‘தமிழ்த் தேசிய இனத்தின் எழுச்சியே தமிழ்த் தேசத்தின் மீட்சி’ என்ற பரப்புரைக் கூட்டத்திலே இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “தமிழர்களின் எழுச்சி நிகழ்வான நாளாகவும் தமிழினம் விடுதலை பெறாத நிலையில் நடைபெறுகின்ற மற்றொரு ஜனாதிபதி தேர்தலாகவும் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறுகின்ற தேர்தல் அமைகின்றது.

விடுதலைக்கான போராட்டம்

அவ்விதமான தேர்தலில் எமது விடுதலையையும், அதற்கான இலட்சியப் பயணதுக்காகவும் எங்களுடைய வாக்குகளை பயன்படுத்துவோம் என்ற உறுதியோடு இந்த எழுச்சி நிகழ்வில் பங்கெடுத்துள்ளீர்கள்.

இரட்டை வேடம் போடும் மாவை! சஜித்திற்கு ஆதரவு என அறிக்கை - பொது வேட்பாளருக்கு பிரசாரம் | Mavai Senathiraja Supports Tamil Candidate

விடுதலைக்கான போராட்டத்தில் மக்களையும், போராளிகளையும் பலிகொடுத்துள்ளோம்.
அந்த வகையில் நாம் எமது பயணத்திலே உறுதியாக இருக்கின்றோம்.

அந்தப் பயணத்தினை வலுவானதாக மேற்கொள்ள வேண்டும் என்ற இலட்சியத்துடன் இருக்கும் உங்கள் முன்னிலையில் அந்த இலட்சியத்துக்காக என்னுடைய வாக்கினையும் அளிப்பேன் என்ற உறுதிப்பாட்டுடன் வருகைதந்துள்ளேன்.

தமிழர்களின் இலட்சியம்

அதுமட்டுமன்றி, நீங்கள் அனைவரும், தமிழர்களின் இட்சியத்துக்கான எழுச்சியை வெளிப்படுத்தும் வகையில் உங்களது வாக்குகளை எதிர்வரும் 21ஆம் திகதி அளிக்க வேண்டும் என்றும் நான் வலியுறுத்துகின்றேன். 

இரட்டை வேடம் போடும் மாவை! சஜித்திற்கு ஆதரவு என அறிக்கை - பொது வேட்பாளருக்கு பிரசாரம் | Mavai Senathiraja Supports Tamil Candidate

கடந்த காலத்தில் எமது விடுதலைக்காக அர்ப்பணிக்கப்பட்ட உயிர்களை நெஞ்சில் நிறுத்தியவனாக , அதற்காக பயணிக்கும் எமது உயிர்களும் எப்போது வேண்டுமானாலும் போகலாம், பணயம் வைக்கப்படலாம் என்பதை நினைவு படுத்துகின்றேன்.

எதிர்கால எமது இலட்சியத்துக்கான பயணத்தில் அர்ப்பணிப்புச் செய்வதற்கு தயாராக உள்ள மக்களுக்கும் நன்றி உடையவனாக தேசமாக எழுச்சி அடைவோம். அதற்காக உழைப்போம் என்று உரைத்து விடைபெறுகின்றேன்” என்றார்.

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.