தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்கள் பெருந்தொகை பணத்தை கொடுத்து தமிழ் கட்சித் தலைவர்களை வழிநடத்தியுள்ளதாக தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (18.09.2024) இடம்பெற்ற இறுதி
பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்ததையடுத்து, நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும். அதில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கிய தமிழ் கட்சியினர் ஐக்கிய மக்கள் சக்தியில் வாக்கு கேட்பார்களா அல்லது தமிழ்க் கட்சிகளிலேயே கேட்பார்களா என்பது அவர்களுக்கே தெரியும்.
தமிழ் அரசியல்வாதிகள் சிலர் வருகின்ற பணத்தை வாங்கி தங்களுக்கு சாதகாமன் அரசியலையே செய்து கொண்டிருக்கின்றார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,