முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தனிநபரின் கம்பனியாக மாறியுள்ள தமிழரசுக் கட்சி : கே.வி.தவராசா ஆவேசம்

இலங்கை தமிழரசு கட்சியானது தற்போது ஒரு தனி நபருடைய கம்பனியாக மாறி
இருக்கின்றது என ஜனநாயக
தமிழரசு கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான
கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மண்டபத்தில் நேற்றையதினம் (20) நடைபெற்ற தேர்தல்
பிரசார நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தனியான கட்டுக்கோப்புக்குள் கட்சி

மேலும் தெரிவிக்கையில், “16 ஆண்டுகள் தமிழரசுக் கட்சியின் உள்ளே இருந்தேன். இதன்போது மத்திய குழு,
அரசியல் குழு மற்றும் சட்டக் குழுவின் பல குழுக்களில் இருந்தேன்.

கட்சிக்கு
வரும் வழக்குகளுக்கும் நான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தேன். அரசியல்
கைதிகளான குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரது வழக்குகளில் இருந்து இதுவரை
ஆயிரத்திற்கும் மேற்பட்ட, அரசியல் கைதிகளின் வழக்குகளில் நான் முன்னிலையாகி உள்ளேன்.
வாதாடிய வழக்குகளில் எவருமே சிறை செல்லவில்லை.

தனிநபரின் கம்பனியாக மாறியுள்ள தமிழரசுக் கட்சி : கே.வி.தவராசா ஆவேசம் | Itak Become An Individual S Company K V Thavarasha

இலங்கை தமிழரசு கட்சியானது தற்போது ஒரு தனி நபருடைய கம்பனியாக மாறி
இருக்கின்றது.

கட்சிக்குள் இருந்த அனைவரையும்
விலக்கிவிட்டு தனது தனியான கட்டுக்கோப்புக்குள் கட்சியை வைத்திருக்கின்றார்.

கட்சியின் தலைவர் தேர்தலில் சிறீதரன் வெற்றி பெற்றிருந்தார்.
இருந்தாலும் அவருக்கான பதவி வழங்கப்படாது, நீதிமன்றத்தில் வழக்கு இருக்கின்றது.

ஒவ்வொரு பதவிகளுக்கான ஆசை

தமிழ் தேசியம் தான் எமது தமிழரசு கட்சியின் தாரகை மந்திரம். தமிழ் தேசியமானது
பாதுகாக்கப்பட வேண்டும். நாங்கள் இல்லாவிட்டாலும் கூட அடுத்த தலைமுறையிடம்
அதனை ஒப்படைத்துவிட்டு செல்ல வேண்டும்.ஆனால் தமிழரசு கட்சிக்குள் அது
நடைபெறவில்லை.

தனிநபரின் கம்பனியாக மாறியுள்ள தமிழரசுக் கட்சி : கே.வி.தவராசா ஆவேசம் | Itak Become An Individual S Company K V Thavarasha

கட்சிக்குள் இத்தனை பேர் இருந்தும் ஏன் எதனையும் செய்யவில்லை என நீங்கள் கேட்க
கூடும். கட்சிக்குள் இருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதவிகளுக்கான ஆசைகளில்
இருந்தார்கள்.

மாகாண சபை தேர்தல் வந்தால் அந்த தேர்தலில் முதலமைச்சர் யார்,
அமைச்சர்கள் யார், பிரதேச சபை தேர்தல்களில் போட்டியிடுபவர்கள் யார் என
அவர்களுக்கு பதவி வழங்கப்பட்டு விட்ட நிலையில் அவர்கள் அனைவரும் அமைதியாகி
விட்டார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில் தான் கட்சியை நடத்த முடியாது என நான்
வெளியேறி வந்தேன்.

நான் ஆறாம் திகதி கட்சியை விட்டு வெளியேறி வந்த பின்னர் பலர் என்னிடம்
கேட்டார்கள் ஏன் கட்சியை விட்டு வெளியேறினீர்கள், கட்சிக்கு உள்ளே இருந்து
சரிசெய்திருக்கலாம் தானே என்று. எட்டாம் திகதி தலைவர், தான் வகித்த சகல
பதவிகளிலும் இருந்து விலகினார். இது ஒருவருடைய சர்வாதிகாரப் போக்கை
காட்டுகின்றது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.