யாழ்.மாவட்ட மற்றும் தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களின் தீர்மானங்களை புறம்தள்ளி தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்ட விகாரை அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்தார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையில் இடம்பெற்ற ஒருக்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் அதனை குறிப்பிட்டார்.
அதன் போது, தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியில் உள்ள தனியாருக்கு, அருகில்
உள்ள விகாரை காணிகளை வழங்குவதற்கு அல்லது அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்கு
நடவடிக்கை எடுக்க முடியும் என வடமாகாண ஆளுநர் தெரிவித்தார்.
இன நல்லிணக்கம்
ஆளுநர் கூறிய விடயத்திற்கு ஜனாதிபதியும் செவி சாய்த்ததுடன், அதனை நாடாளுமன்ற
உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனும் ஏற்றுக் கொண்டார்.
இருந்த போதிலும், சட்டவிரோதமான முறையில் மதில் கட்டினாலே அகற்ற சட்டம் இருக்கையில், சட்டவிரோதமான முறையில், ஒருங்கிணைப்பு குழு தீர்மானங்களையும் மீறி அடாத்தாக கட்டப்பட்ட விகாரை அகற்றப்பட வேண்டும் என்றும் அது எந்த விதத்திலும் இன நல்லிணக்கத்திற்கோ, மாற்றத்திற்கோ ஏற்றதல்ல எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டினார்.
https://www.youtube.com/embed/eqc1szdGOps