வவுனியா(Vavuniya) தொடருந்து வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் மது போதையில் அட்டகாசம்
செய்த இந்து மதகுரு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று(30.01.2025) இடம்பெற்றுள்ளதாக வவுனியா காவல்துறை தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வவுனியா, தொடருந்து நிலைய வீதியில் நேற்று முன்தினம்(29) இரவு 9.30 மணியளவில் இந்து மது போதையில் சென்ற இந்து மதகுரு ஒருவர் அப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் கொத்து ரொட்டி போடும் கூட்டு கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.
கைது நடவடிக்கை
அத்துடன், அருகில் இருந்த தொலைகாட்சி திருத்துமிடத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த பழைய தொலைக்
காட்சி பெட்டிகளையும் சேதப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து, குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் வீதியில் சென்றோர்
குறித்த மதகுருவை மடக்கிப்பிடித்து வைத்திருந்ததுடன் வவுனியா காவல்துறையினருக்கு
தகவல் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் குறித்த இந்து மதகுருவை கைது செய்ததுடன்,
வவுனியா காவல்நிலையத்தில் காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதன்பின்னர், இன்று (30) அவரை பிணையில் விடுவித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.