லெபனான் (Lebanon) மீது இஸ்ரேல் (Israel) ஆளில்லா விமான தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹிஸ்புல்லா, இஸ்ரேல் இடையே ஒப்பந்த முறையில் உள்ள காரணத்தினால் போர் நிறுத்தப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லா
ஆனாலும், ஹிஸ்புல்லா அமைப்பின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் லெபனான் மீது இஸ்ரேல் நேற்று (08.02.2025) ஆளில்லா விமான தாக்குதல் நடத்தியுள்ளது.
லெபனானின் ஜனதா நகரில் உள்ள சாரா என்ற பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பினர் 6 பேர் உயிரிழந்ததுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.