புதிய இணைப்பு
நியூசிலாந்து அணியுடன் இடம்பெற்ற ஐசிசி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் இந்திய(India) அணி 49 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
முதலாம் இணைப்பு
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணம் தொடரின் இறுதிப் போட்டி நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் தற்போது இடம்பெற்று வருகிறது.
இந்த போட்டியில் நாணயசுழற்சியல் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்திருந்தது.
அதிகபட்ச ஓட்டங்கள்
அதனை தொடர்ந்து களத்திற்கு இறங்கிய நியூசிலாந்து அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 251 ஓட்டங்களை குவித்துள்ளது.
இதேவேளை, இந்த போட்டியில் அதிகபட்சமாக 101 பந்துகளில் 63 ரன்களும், பிரேஸ்வெல் 40 பந்துகளில் 53 ஓட்டங்களும் விளாசியுள்ளார்.
அதன்போது, இந்திய அணி சார்பில் பந்து வீசிய வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
வெற்றி இலக்கு
இவ்வாறானதொரு பின்னணியில், 50 ஓவர்களலில் 252 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.
இதேவேளை, நியூசிலாந்து அணி மொத்தமாக 154 பந்துகளை ஓட்டங்களே பெறாமல் விளையாடி இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.