உக்ரைன்(ukraine) உடன் போர் நிறுத்தத்துக்கு, நிபந்தனைகளின் அடிப்படையில் தயாராக இருப்பதாக ரஷ்ய(russia) ஜனாதிபதி விளாடிமிர் புடின் (vladimir putin)தெரிவித்துள்ளார்.
இது தெடார்பாக ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவிக்கையில்,
உக்ரைன் உடன் குறுகியகால தற்காலிக போர் நிறுத்தத்துக்கு தயார். அதற்கான பேச்சுக்கு தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்த விதிகளில் தெளிவான புரிதல் இருக்க வேண்டும்
அந்த போர் நிறுத்த ஒப்பந்தம், அமைதிக்கான இறுதி தீர்வை நோக்கிச் செல்வதாக இருக்க வேண்டும் என்றும் புடின் நிபந்தனை விதித்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.
‘இறுதி போர் நிறுத்த ஒப்பந்த விதிகளில் தெளிவான புரிதல் இருக்க வேண்டும்; அமைதி பணிகளில் எந்தெந்த நாடுகள் பங்கு வகிக்கும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்’ என்றும் புடின் நிபந்தனை விதித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில், அமெரிக்கா, உக்ரைன் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சு, மேற்கு ஆசிய நாடான சவுதி அரேபியாவில் நாளை நடக்கிறது.
அப்போது புடின் தெரிவித்த போர் நிறுத்த ஒப்பந்த நிபந்தனைகள் குறித்தும் பேசப்படும் என தெரிகிறது