கிளிநொச்சியில் அஸ்வெசும, மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் சிறந்த முறையிலான எதிர்காலம் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடல் இன்று (25) மாவட்ட செயலாளர் எஸ். முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு, மற்றும் சமூக சமூக வலுவூட்டல்
அமைச்சின் சமுர்த்தி திணைக்களத்தின் சமூக வேலைத்திட்டத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டு
தொடக்கம் 2029 ஆம் ஆண்டுக்கான தொடர்பான தெளிவூட்டல் இதில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
சமூக வலுவூட்டல்
சமூக வலுவூட்டல் ஊடாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நலன்புரித்
திட்டங்களைப் சிறந்த முறையில் மேற்கொண்டு வறுமையை ஒழித்தல் வலுவூட்டலின்
முக்கிய துறைகள் மற்றும் அஸ்வெசும, மற்றும் குறைந்த வருமானம் பெறும்
குடும்பங்களின் தெரிவுகளும் சிறந்த முறையில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட
வேண்டும் எனவும் என்று இவ் கலந்துரையாடலில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு, மற்றும் சமூக
வலுவூட்டல் அமைச்சின் அதிகாரிகள், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர்,
மாவட்ட பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், மாவட்ட பிரதம கணக்காளர், பிரதேச
செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள்,
சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய
உத்தியோகத்தர்கள் முதலானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.