முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வவுனியாவில் 103 உறுப்பினர்களை தெரிவு செய்ய 1231 வேட்பாளர்கள் களத்தில்!

எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா
மாவட்டத்தில் 103 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 1231 வேட்பாளர்கள் தமது
வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட அரச அதிபரும் தேர்தல்
தெரிவத்தாட்சி அலுவலருமான பி.ஏ.சரத்சந்திர தெரிவித்துள்ளார்.

இன்று (20) மாலை வேட்புமனுக்கள் ஏற்கும் பணிகள் நிறைவடைந்த பின்னர்
இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே
அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வேட்பு மனுக்கள்

அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளும்
நடவடிக்கைகள் கடந்த 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு மதியம் 12 மணியவளவில்
நிறைவுக்கு வந்திருந்தது.

வவுனியாவில் 103 உறுப்பினர்களை தெரிவு செய்ய 1231 வேட்பாளர்கள் களத்தில்! | 1231 Candidates In The Field In Vavuniya

அந்தவகையில், வவுனியா மாவட்டத்தில் உள்ள ஐந்து உள்ளூராட்சி மன்றங்களில்
போட்டியிடவுள்ள கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் மாவட்ட செயலகத்தில்
அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

மாநகரசபை

இதுவரை நகரசபையாக இருந்து தரமுயர்த்தப்பட்ட வவுனியா மாநகரசபைக்கு முதலாவது
தேர்தலாக இது அமைந்துள்ளது.

இம்முறை மாநகரசபையில் மொத்தமாக 20 உறுப்பினர்கள்
தெரிவுசெய்யப்படவுள்ளனர். அதற்காக 10அரசியல் கட்சிகளும், 2
சுயேட்சைகுழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தன.

அவற்றில் மக்கள்
போராட்ட முன்னணியின் வேட்பு மனு முழுமையாக நிராகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன்
ஐக்கிய தேசியக் கட்சியில் வேட்பாளர் ஒருவர் நிராகரிக்கப்பட்டுள்ளார். அதன்படி
11 தரப்புக்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தெற்கு தமிழ் பிரதேச சபை

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு 26 உறுப்பினர்கள் தெரிவு
செய்யப்படவுள்ளனர். அதற்காக 12 அரசியல் கட்சிகளும் 4 சுயேட்சை குழுக்களும்
வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தது.

அவற்றில் ஜனநாயக தேசிய கூட்டணி,
ஐக்கியதேசிய கட்சி மற்றும் ஒரு சுயேட்சை குழுவின் வேட்புமனுக்கள்
நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் 13 தரப்புக்களின் விண்ணப்பங்கள்
ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

செட்டிகுளம் பிரதேச சபை

வெண்கல செட்டிகுளம் பிரதேசசபைக்கு 18 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்னர்.

அதற்காக 10 அரசியல் கட்சிகளும் 2 சுயேட்சை குழுக்களும் வேட்பு மனுக்களை
தாக்கல் செய்திருந்த நிலையில் விண்ணப்பித்த 12 தரப்புக்களின் வேட்பு
மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வடக்கு பிரதேச சபை

வவுனியா வடக்கு பிரதேசசபையில் 23 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
அதற்காக 09 அரசியல் கட்சிகளும், 02 சுயேட்சை குழுக்களும் வேட்புமனுக்களை
தாக்கல் செய்திருந்தது.

அவற்றில், இரண்டு சுயேட்சைகுழுவின் விண்ணப்பங்கள்
நிராகரிக்கப்பட்டுள்ளது. 9 தரப்புக்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சிங்கள பிரதேச சபை

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையில் 16 உறுப்பினர்கள் தெரிவு
செய்யப்படவுள்ளனர். அதற்காக 07 அரசியல் கட்சிகளும், 2 சுயேட்சை குழுக்களும்
வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் அவை அனைத்தும்
ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகளில் 103
உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 1231 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.

இதேவேளை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக 71 தரப்புக்கள் கட்டுப்
பணத்தினை செலுத்தியிருந்தது.

அவற்றில் 11 தரப்புக்கள் வேட்புமனுக்களை
கையளித்திருக்கவில்லை. இத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் 129,293
வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர் எனத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.