தற்போது நடைபெற்று வரும் யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கூட்டத்தில் கலந்து கொண்ட யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி கடும் குழப்ப நிலை ஏற்பட்டதை அடுத்து, கூட்டத்தின் தலைவர் அமைச்சர் சந்திரசேகரனால் அதனை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கூட்டம் இடைநிறுத்தப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.








