உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிப்பது தொடர்பில் விசேட அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, வாக்காளர் அட்டைகள் ஏப்ரல் 16 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை விநியோகிக்கப்படும் என அஞ்சல் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஏப்ரல் 20 ஆம் திகதி சிறப்பு விநியோக நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அஞ்சல் வாக்குப்பதிவு
இந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற உள்ளது.
இந்தநிலையில், அஞ்சல் வாக்குப்பதிவு 22 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.