இலங்கையை வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) சந்தித்துள்ளார்.
இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ அரசு விஜயத்தின் போது, கொழும்பில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில் குறித்த சந்திப்பின் போது சஜித் பிரேமதாச நரேந்திர மோடிக்கு சிறுத்தையின் புகைப்படம் தாங்கிய நினைவுப் பரிசு ஒன்றினை அன்பளிப்பு செய்துள்ளார்.
VIDEO | Prime Minister Narendra Modi (@narendramodi) meets Sri Lankan Leader of Opposition Sajith Premadasa in Colombo.
(Source: Third Party)
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/obH2pmDvk3
— Press Trust of India (@PTI_News) April 5, 2025
மேலும், இந்தியா – இலங்கை இடையேயான நட்பை வலுப்படுத்துவதில் சஜித் பிரேமதாச கொண்டுள்ள தனிப்பட்ட பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் தாம் பாராட்டியதாக நரேந்திர மோடி தமது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

