பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்குவதற்காக 2ஆயிரம் ரூபாய் கையூட்டல் பெற்றதாக
குற்றம் சாட்டப்பட்ட அனுராதபுரம் நகராட்சி மரண விசாரணை அதிகாரி மற்றும் அவரது
உதவியாளரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் முகமது ரிஸ்வான், ஏப்ரல் 21ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று உத்தரவிட்டார்.
விளக்கமறியல்
அனுராதபுரம் நகராட்சி மரண விசாரணை அதிகாரி முதியன்சலாகே ஜெயதிலக மற்றும் அவரது
உதவியாளர் ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மரணமான தமது உறவினரின் பிரேத பரிசோதனை அறிக்கை தாமதமானதாக கூறப்பட்ட நிலையில்,
அதனை உடனடியாக வழங்கவும் இறப்புச் சான்றிதழுக்கான தேவையான விண்ணப்பத்தை
நிரப்பவும் சந்தேக நபர்கள் 2ஆயிரம் ரூபாயைக் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட பின்னர், அவர்கள் அனுராதபுரம் நீதிவான் நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்பட்டு, பின்னர் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்பட்டனர்.