முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வீதியில் சென்ற இளைஞர்களுடன் அராஜகத்தில் ஈடுபட்ட மாங்குளம் பொலிஸார்!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் காரில் நேற்றிரவு வவுனியா நோக்கி
பயணித்தி கொண்டிருந்த வேளை, மாங்குளம் பொலிஸார் அவர்களை வழிமறித்துள்ளனர்.

இதன்போது, மின்வளக்கின் வெளிச்சத்தை பொலிஸார் கண்களில் இளைஞர்களின் பாய்ச்சிய நிலையில், காரில் பயணித்த இளைஞர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் காரில் இருந்து இறங்கிய
இளைஞர்கள் இப்படி வெளிச்சத்தினை கண்களில் பாய்ச்சி வாகனங்களை மறிக்க கூடாது என
தெரிவித்துள்ளனர். 

 மின்வளக்கின் வெளிச்சம் 

இதன்போது குறிக்கிட்ட பொலிஸார் இளைஞர்களை மிரட்டும் வகையில், அப்படித்தான்
செய்வோம், என்ன செய்ய முடியும் என கூறியுள்ளனர். 

வீதியில் சென்ற இளைஞர்களுடன் அராஜகத்தில் ஈடுபட்ட மாங்குளம் பொலிஸார்! | Mangulam Police Issue Youngsters Complain

பின்னர், இளைஞர்கள் “பதில் பொலிஸ்
மா அதிபர் பிரியந்த வீரசூரியவே இவ்வாறு வாகனங்களை மின்வளக்கின் வெளிச்சத்தை
கண்களில் பாய்ச்சி மறிக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்” என கூறியுள்ளனர்.

இதன்போது பொலிஸார் அவரது அறிவிப்பு குறித்து எமக்கு தெரியாது என்று கூறிவிட்டு
சிங்களத்தில் பேச ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் இளைஞர்கள், எமக்கு சிங்களம்
தெரியாது, தமிழில் பேசுங்கள் என கூறிய வேளை, ”இது சிறீ லங்கா, நீங்கள்
சிங்களம் பேசத்தான் வேண்டும், தமிழில் எல்லாம் பேச முடியாது” என்று மிரட்டியுள்ளனர்.

முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை 

மேலும், குறித்த பொலிஸார் மேல் அங்கியினை அணிந்திருந்த நிலையில் அவர்களது தகட்டு
இலக்கம் மறைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் உங்களது தகட்டு இலக்கத்தை
கூறுங்கள், நாங்கள் இது குறித்து வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா
அதிபர் திலக் தனபாலவிடம் முறையிடுகின்றோம் என இளைஞர்கள் கூறியுள்ளனர்.

வீதியில் சென்ற இளைஞர்களுடன் அராஜகத்தில் ஈடுபட்ட மாங்குளம் பொலிஸார்! | Mangulam Police Issue Youngsters Complain

இதன்போது பொலிஸார் “நீங்கள் அவரிடம் கூறி எதுவும் செய்யப் போவது இல்லை.
அவராலும் எதுவும் செய்ய முடியாது. தகட்டு இலக்கமும் வழங்க முடியாது என மிரட்டி
அனுப்பியுள்ளனர். 

அதன் பின்னர் வந்த வாகனங்களையும் பொலிஸார் மின்விளக்கின் ஒளி பாய்ச்சியே வழி மறித்துள்ளனர்.

அநுர அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் பொலிஸாரின் அராஜகம் கட்டவிழ்த்து
விடப்பட்டு காணப்படுறது.

இது குறித்து செய்திகள் வெளியாகிய நிலையிலும் உரிய
தரப்பினர் நடவடிக்கை எடுப்பது போல் தெரியவில்லை. எனவே உரிய அதிகாரிகள்
இவ்வாறான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கையாக விடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.