தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடாரில் (Ecuador) நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நிலநடுக்கமானது ஈக்வடார் கடற்கரைக்கு அருகில் இன்று (25) உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, 6.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சுனாமி அச்சுறுத்தல்
அத்துடன், இந்த நிலநடுக்கம் 23 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

