யாழ்ப்பாணம் (Jaffna) – நல்லூரில் மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனமொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவிலின் பின் பகுதியில், தியாகி
திலீபன் நினைவிடத்துக்கு அருகாமையில் இன்று (09) கலை குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்து குறித்து மேலும் தெரியவருகையில், மணல் ஏற்றி வந்த டிப்பரை துரத்திச் சென்ற காவல்துறையினர் வேகத்தடையை போட்டுள்ளனர்.
காவல்துறையினர் விசாரணை
இந்தநிலையில் டிப்பரின் சக்கரங்கள் காற்றுப்போய் வீதியில் இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் வீதியோரத்தில் இருந்த வீட்டின் மதில் இடிந்து வீழ்ந்துள்ளதுடன் வீட்டிலும் சேதம் ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து டிப்பரின் சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகள் யாழ்ப்பாணம் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.






https://www.youtube.com/embed/f4je3vxQygo

