கொழும்பு மாநகர சபையின் (CMC) முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்கு, எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்டிருப்பதால், மற்ற எதிர்க்கட்சிகளின் ஆதரவை நாடும் என்று ஐக்கிய மக்கள் சக்தி (SJB) தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார (R. M. Ranjith Madduma Bandara) குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி (NPP) அதிக இடங்களை வென்ற போதிலும், எதிர்க்கட்சிகளே பெரும்பான்மையைக் கொண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
தேசிய மக்கள் சக்தி
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அதிக எண்ணிக்கையிலான இடங்களை வென்ற போதிலும், கொழும்பு மாநகர சபையில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையைக் கொண்டுள்ளன.

அந்தவகையில் தேசிய மக்கள் சக்தி கொழும்பு மாநகர சபையில் அதிக வாக்குகளைப் பெற்று மொத்தம் 48 இடங்களை வென்றது.
எனினும், இலங்கையின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய உள்ளூராட்சி அதிகாரசபை மற்றும் இலங்கையின் மிகப்பெரிய நகரம் மற்றும் நிதி மையத்தின் நகராட்சி நிர்வாக அமைப்பான கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி ஒட்டுமொத்த பெரும்பான்மையைப் பெறத் தவறிவிட்டமை குறிப்பிடத்தக்கது.

