கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் தொழிற்பயிற்சி
நிறுவனத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்
சிறீதரன் இன்றையதினம்(19) விஜயம் செய்துள்ளார்.
இதன்போது, இயங்குநிலையிலுள்ள இடர்பாடுகள் தொடர்பில், நிறுவனத்தின்
முதல்வர் உள்ளிட்ட நிர்வாக பீடத்தினருடன் கலந்துரையாடியுள்ளார்.
நிலவிவரும் குறைபாடுகள்
முன்னதாக, குறித்த நிறுவனத்தில் நீண்டகாலமாக நிலவிவரும் குறைபாடுகள் மற்றும்
ஆளணிப் பற்றாக்குறை உள்ளிட்ட விடயங்கள் சார்ந்து நிறுவனப் பணியாளர்களால்
நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுகக்கு முன்வைக்கப்பட்ட எழுத்துமூல
கோரிக்கை தொடர்பிலான அடுத்தகட்ட நடவடிக்கைகளின் பொருட்டே அவர் குறித்த
நிறுவனத்திற்கு நேரடியாக சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





