பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு (Harini Amarasuriya) மின்னஞ்சல் மூலம் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.
இன்று (20.05.2025) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு மின்னஞ்சல் மூலம் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மரண அச்சுறுத்தல்
ஜேர்மனி, நெதர்லாந்து ஐபி முகவரிகளை வைத்திருப்பவர்களே இந்த மின்னஞ்சல் மிரட்டலை விடுத்துள்ளனர். இந்த மிரட்டல் தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் தேசபந்து தென்னக்கோனை கொலை செய்வதற்கான சதிதிட்டம் குறித்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
தென்னக்கோனை கொலை செய்வதற்கான பொறுப்பு சிறைத்தண்டனை அனுபவிக்கும் சமன் குமார என்பவரிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாசவை சினைப்பர் தாக்குதல் மூலம் கொலை செய்யதிட்டமிட்டுள்ளனர் என்ற பொய்யான தகவல் கிடைத்துள்ளது இது பொய்யான தகவல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
YOU MAY LIKE THIS
https://www.youtube.com/embed/XN7apHzvI3E

