திருகோணமலை (Trincomalee) – திருஞானசம்பந்தர் வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து சற்று முன்னர் திருகோணமலை – திருஞானசம்பந்தர் வீதியில் கடல்முக சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
மோட்டார் சைக்கிள் மற்றும் வான் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் படுகாயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விபத்து குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

