சரிகமப
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமான நிகழ்ச்சிகளில் ஒன்று சரிகமப. இதில் சீனியர் மற்றும் ஜூனியர் என இரண்டு பிரிவுகளில் சரிகமப நடந்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் மூலம் உலகளவில் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர்.
இந்த நிலையில், சரிகமப சீசன் 3 டைட்டில் வின்னர் புருஷோத்தமன் மற்றும் டாப் 5ல் வந்த அக்ஷயா சிவகுமார் ஆகிய இருவரும் இலங்கைக்கு சென்றுள்ளனர்.


தக் லைஃப் திரைவிமர்சனம்
கிளிநொச்சியில் சரிகமப பிரபலங்கள்
அங்கு யாழ்ப்பாணத்தில் கிளிநொச்சியில் உள்ள வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்திற்கு, புருஷோத்தமன் மற்றும் அக்ஷயா சிவகுமார் இருவரும் சென்றிருக்கின்றனர். வன்னி நாதம் இசை குழு பங்கேற்பதற்காக தான் புருஷோத்தமன் மற்றும் அக்ஷயா சிவகுமார் அங்கு வருகை தந்துள்ளனர்.
இவர்கள் மட்டுமின்றி சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 டைட்டில் வென்ற கில்மிஷாவும் வன்னி நாதம் இசை குழுவிற்கு சென்றுள்ளார். இவர்கள் மூவருடன் இணைந்து வன்னி நாதம் இசை குழு பாடகர்கள் பாடவுள்ளனர்.

இந்த நிலையில், இலங்கைக்கு சென்றிருக்கும் புருஷோத்தமன் மற்றும் அக்ஷயா சிவகுமார் இருவரும் தங்களது அனுபவத்தை ஐபிசி தமிழ் நேர்காணலில் பகிர்ந்துகொண்டனர்.
அந்த நேர்காணலை முழுமையாக இங்கு காணலாம்:

