யாழ்ப்பாணத்தில் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்ட முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்போது கீரிமலை வீதி, சித்தங்கேணி பகுதியைச்
சேர்ந்த 77 வயதுடைய முதியவரே நேற்றையதினம் இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.
குறித்த முதியவர் கடந்த நான்காம் திகதி மதுபோதையில் மருத்துவ மாத்திரைகளை
அளவுக்கு அதிகமாக உட்கொண்டுள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைகள்
பின்னர் அவரது மனைவி ஐந்தாம் திகதி அதிகாலை
அவரை எழுப்பியுள்ளார். அவர் மயக்கம் அடைந்து காணப்பட்டதால் யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தொடர்ந்து மயக்க நிலையிலேயே காணப்பட்ட குறித்த முதியவர் சிகிச்சை பலனின்றி
நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண
விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
மருத்துவ வில்லைகளை அளவுக்கதிகமாக உட்கொண்டதால் மரணம் சம்பாதித்துள்ளதாக
உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

