இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதலில், தெஹரானில் உள்ள விமான நிலையத்தில் இரு ஈரானிய F-14 போர் விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இதனை இஸ்ரேல் பாதுகாப்பு படை(IDF) பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் எப்பி டெஃப்ரின் உறுதிபடுத்தியுள்ளதுடன், காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது.
1979 இஸ்லாமிய புரட்சிக்கு முந்தைய காலத்தில் அமெரிக்கா வழங்கிய இந்த F-14 விமானங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ள கடைசியாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
தொடர் தாக்குதல் காணொளிகள்
மேலும், இஸ்ரேலுக்கு ட்ரோன் தாக்குதல் நடத்த தயாராகியிருந்த ஈரானிய இராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது.
RECAP of Our Recent Operations Over Tehran:
🛫 Strike on two F-14 fighter jets that were located at an airport in Tehran. These jets were intended to intercept Israeli aircraft.
❌ Thwarted a UAV launch attempt toward Israel.
🎯 Eliminated a launch cell minutes before launch… pic.twitter.com/y1gY7oBz99
— Israel Defense Forces (@IDF) June 16, 2025
ட்ரோன்கள் வைத்திருந்த தொட்டிகளிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை காண்பிக்கும் காணொளியில் வெளியாகியுள்ளது.
அத்துடன், ஈரானின் தேசிய ஒளிபரப்பு நிலையத்தின் கட்டடத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் காணொளியையும் IDF வெளியிட்டுள்ளது.

