பிரேசிலில் (Brazil) வெப்ப காற்றுப் பலூன் ஒன்றில் ஏற்பட்ட தீ காரணமாக அது வானிலிருந்து கீழே விழுந்து எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரேசிலில் தென் மாநிலமான சாண்டா கட்டாரினாவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்து சம்பவம் தொடர்பில் வெளியான காணொளியில், பலூன் தீப்பற்றி எரிகின்றபோது அதிலிருந்து கரும் புகைமூட்டம் வெளிப்படுவதையும், பின்னர் தரையிறங்கும் போதே தீவிபத்தில் சிதறிப் போவதையும் காணக்கூடியதாகவுள்ளது.
விபத்துக்குள்ளான பலூன்
விபத்துக்குள்ளான பலூனில் மொத்தமாக 21 பேர் இருந்த நிலையில், 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

இது போன்றதொரு சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமையும் சாவ் பவுலோ மாநிலத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

