செம்மணியில் அதிகளவான மனித எச்சங்கள் மீட்கப்படும் நிலையில் அவரசமாக மேற்கொள்ளப்பட வேண்டிய சில நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கத் தவறுவதன்
காரணமாக அதனை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய சூழல்
ஏற்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று (06.30.2025) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்
இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், “செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் நேற்றிலிருந்து சில விடயங்கள்
நடைபெற்று வருகின்றன. இதனை தமிழ் மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கு
தெளிவுபடுத்த வேண்டிய தேவையிருக்கின்றது.
செம்மணியில் தொடர்ந்து மனித எச்சங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதுவரையில் 33 பேரின் எச்சங்கள் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும் அதனை
பாதுகாப்பதற்கு கூடாரங்களோ அல்லது பாதுகாப்பதற்கான எந்த நடவடிக்கையும்
முன்னெடுக்கப்படவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,

