தென்னிலங்கையை பொறுத்தவரையில் தற்போது தமிழர்பகுதிகளில் இடம்பெற்ற கைதுகள் தொடர்பில் அச்சமும் பதற்றமும் அடைந்திருப்பதனை அண்மைய ஊடகவியலாளர் சந்திப்புகளும் அரசியல் பிரமுகர்களின் கூற்றுகளும் எடுத்துக்காட்டுகின்றன.
பிள்ளையான் கருணாவினுடைய கைது தொடர்பில் இலங்கை அரசாங்கம் பாரபட்சமாக செயற்படுகின்றது என்ற கருத்து தென்னிலங்கையில் நிலவுகின்றது.
மேலும் புலம்பெயர்தமிழர்களால் பிள்ளையான் மற்றும் கருணா இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்வீரவனச குறிப்பிடுகின்றார்.
சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருக்க கூடிய பிள்ளையான் ஆட்சியாளர்களின் பெயர்களை கூறிவிடுவார்களோ என்ற அச்சத்தின் அடிப்படையில் அதனை திசை மாற்றுவதற்காக விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சரத் வீரசேகர ஆகியோர் பல தரப்பட்ட கருத்துக்களை கூறிவருகின்றனர்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி…