1999 நவம்பர் 20ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் மடுத்திருப்பதி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
அந்த இடத்திலே தஞ்சமடைந்திருந்த 35 பொதுமக்கள் உயிரிழந்தார்கள்,பலர் படுகாயமடைந்தார்கள்.
அப்போது விரைந்து செயற்பட்ட மன்னார் மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் மறுநாள் காலை அதிகாலை 5.30 மணியளவில் நீதிபதி இளஞ்செழியனிடம் முக்கியமான கோரிக்கையொன்றினை முன்வைத்தார்.
அந்த காலப்பகுதியில் நீதவான் ஒருவர் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் இடத்திற்கு அழைத்து செல்லுவதென்றால் கடுமையான நிபந்தனைகள் அரசத்தரப்பால் விதிக்கப்படும்.
அந்த நிபந்தனைகளையெல்லாம் பொறுப்பெற்று அன்றிருந்த ஆட்சியாளர்களிடம் மற்றும் சர்வதேசத்திடமும் கூறிவிட்டு நீதிபதி இளஞ்செழியனுக்கு பாதுகாப்பு வழங்கி அழைத்து சென்றுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி…