இலங்கையில் இங்கும் அங்குமாகத் தொடர் படுகொலைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இதுபோன்ற படுகொலைகளைச் செய்துவருகின்ற ஒரு ஆயுதக் குழு லண்டனில் இருக்கின்ற ஒருவரால் இயக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் ஏராளமான நீதிக்குப் புறம்பான படுகொலைகளைப் புரிந்த அந்த ஆயுதக் குழு பற்றி- அந்த ஆயுதக் குழுவில் இருந்த ஒருவர் கூறுகின்ற சாட்சியைச் சுமந்துவருகின்றது- இந்த ‘உண்மைகள்’ பெட்டக நிகழ்ச்சி,

