துருக்கியில், பிரபல சுற்றுலாத் தலமான சோங்குல்டக் கடற்கரையில் டோல்ஸ் வென்டோ (Dolce Vento) என்ற சொகுசு கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
9 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட 24 மீட்டர் நீளமுள்ள கப்பல், தனது முதல் பயணத்தை மேற்கொண்ட அடுத்த 15 நிமிடங்களில் கடலில் கவிழ்ந்தது.
கடலில் குதித்து உயிர் தப்பிய கப்டன் மற்றும் இரு பணியாளர்கள்
படகில் இருந்த படகு உரிமையாளர், கப்டன் மற்றும் இரு பணியாளர்கள் கடலில் குதித்து உயிர் தப்பினர்.

படகு கவிழ்ந்ததற்கான காரணம் தெரியவில்லை என்றும், ஒருவேளை கப்பலின் நிலைத்தன்மையில் சிக்கல் ஏற்பட்டு கப்பல் கவிழ்ந்திருக்கலாம் எனவும் கடலோர காவல் படையினர் தெரிவித்தனர்.

