பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்ற கூற்றை மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மறுத்துள்ளார்.
பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி நீண்ட காலமாக ஆதாரமற்ற கூற்றுகளைப் பரப்பி வருவதாகவும், ஆனால் அவை எதுவும் நிறைவேறவில்லை என்றும் ரில்வின் கூட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்க்கட்சியினரின் கனவு
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “முன்னதாக, ஹரிணி அமரசூரிய தனது அமைச்சர் பதவியை இழப்பார் என்று அவர்கள் கூறினர்.

இப்போது அவர் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்று கூறுகின்றனர். இவை அவர்களின் கனவுகளைத் தவிர வேறில்லை,” என தெரிவித்துள்ளார்.

