இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்ற
உறுப்பினர்களுக்கான கூட்டம் இன்று (14) ஞாயிற்றுக்கிழமை ஆலையடிவேம்பில்
நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் பதில்
செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான
க.வி.கோடீஸ்வரன் மற்றும் கலையரசன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
உறுப்பினர்களுக்கான கூட்டம்
அம்பாறை
மாவட்டத்தில் உள்ள பொத்துவில், திருக்கோவில், காரைதீவு, சம்மாந்துறை, நாவிதன்வெளி
ஆகிய பிரதேச சபைகளிலுள்ள கட்சியின் தவிசாளர்கள் உறுப்பினர்கள் கலந்து
கொண்டனர்.

இதன்போது, குறித்த கூட்டத்தில், மாவட்ட ரீதியிலான பல்வேறு பிரச்சனைகள், தேவைகள், சவால்கள் தொடர்பாக
கலந்துரையாடப்பட்டன.










