தற்போதைய அரசின் ஆறு முக்கிய அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
சமூக செயற்பாட்டாளர் ஜமுனி கமந்தவினால் குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முறைப்பாட்டில் பிமல் ரத்நாயக்க, சுனில் வட்டகல, சுனில் ஹந்துண்நெத்தி, நலிந்த ஜயதிஸ்ஸ, வசந்த சமரசிங்க மற்றும் குமார ஜயக்கொடி ஆகிய அமைச்சர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
உடனடி விசாரணை
இந்த நிலையில், இது குறித்த விசாரணை உடனடியாகவும் வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும் என ஜமுனி கமந்த வலியுறுத்தியுள்ளார்.


