முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வவுனியா வடக்கு பிரசே சபை அமர்வு : வெளிநடப்பு செய்த ஆளும் கட்சி உறுப்பினர்கள்

மக்கள் பிரச்சினையை கதைக்க அனுமதிக்காமையால் வவுனியா வடக்கு தவிசாளருககு எதிராக
உப தவிசாளா உள்ளிட்ட 7 ஆளும் கட்சி உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு
செய்துள்ளனர்.

வவுனியா வடக்கு பிரசே சபையின் மாதாந்த அமர்வு சபா மண்டபத்தில் தவிசாள்
தி.கிருஸ்ணவேணி தலைமையில் நேற்று (18.09.2025) இடம்பெற்றது.

இதன்போது சபை அமர்வு நிகழ்சி நிரலில் ஏனைய விடயங்கள் என்ற விடயம்
உள்ளடக்கப்படவில்லை என்பது குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளது.

7 நாட்களுக்கு முன் சமர்ப்பித்த

கடந்த காலங்களில் முன் மொழியப்பட்ட விடயங்கள் 7
நாட்களுக்கு முன்னரே வழங்க வேண்டியிருந்தது. 7 நாட்களுக்கு பின உள்ள மக்களின்
அவசர நிலைமை மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் ஏனைய விடயங்கள் தொடர்பில் பேசும்
போது தான் அதனை கலந்துரையாடி முடிவு எட்ட முடியும்.

வவுனியா வடக்கு பிரசே சபை அமர்வு : வெளிநடப்பு செய்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் | Vavuniya Ruling Party Members Who Walked Out

எனவே ஏனைய விடயங்கள்
நிகழ்ச்சி நிரலில் தேவை எனவும் அதன் மூலமே மக்கள் பிரச்சினையை தீர்க்க முடியும்
எனத் தெரிவித்து ஆளும் கட்சி கட்சி உறுப்பின்கள் சிலர் தவிசாளருடன்
வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதற்கு தவிசாளர் தி.கிருஸ்ணவேணி அவ்வாறு அனுமதி வழங்க முடியாது. 7 நாட்களுக்கு
முன் சமர்ப்பித்த விடயங்களை மட்டுமே பேச முடியும் என தெரிவித்தார்.

இதனால்
தவிசாளருக்கும் ஆளுத் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் வாக்குவாதம்
ஏற்பட்டது.

எதிர்த்தரப்பின் ஆதரவுடன்

இதனையடுத்து உப தவிசாளர், வி.சஞ்சுதன் உட்பட ஆளும் கட்சியைச் சேர்ந்த தமிழ்
தேசிய மக்கள் முன்னனி மற்றும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள்
7 பேர் வெளிநடப்பு செய்தனர்.

வவுனியா வடக்கு பிரசே சபை அமர்வு : வெளிநடப்பு செய்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் | Vavuniya Ruling Party Members Who Walked Out

ஆளும் தரப்பை சேர்ந்த தமிழரக் கட்சியின் 5
உறுப்பினர்களும் தேசிய மக்கள் சக்தி மற்றும் ஏனைய பெரும்பான்மையின
உறுப்பினர்களுடன் இணைந்து தவிசாளர் தொடர்ந்தும் சபையை கொண்டு நடத்தினார்.

23 உறுப்பினர்களைக் கொண்ட வவுனியா வடக்கு பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக்
கட்சி 5, தமிழ் தேசிய மக்கள் முன்னனி 4, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு 3
என்பன இணைந்து ஆட்சி அமைத்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் 2
உறுப்பினர்களும், சர்வஜன அதிகாரத்தின் 1 உறுப்பினரும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக
செயற்படுவதுடன் தேசிய மக்கள் சக்தியின் 6 உறுப்பினர்களும், இலங்கை தொழிலாளர்
கட்சியின் 2 உறுப்பினர்களும் எதிர்கட்சியாக செயற்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் 7 பேர் வெளிநடப்பு செய்த நிலையில்
எதிர்த்தரப்பின் ஆதரவுடன் தொடர்ந்தும் அமர்வு இடம்பெற்றது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.