கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிளவுற்றதன் பின்னர் பிள்ளையான் கருணாவிலிருந்து பிளவடைந்தாலும் கடந்த தேர்தலில் இருவரும் ஒன்றாக கைகோர்த்தனர்.
தற்போது தென்னிலங்கையில் இருக்கும் அரசை எதிர்கொள்வதற்கு சஜித்தும் ரணிலும் இவ்வாறு கைகோர்க்கின்றனர்.
ஆனால் தமிழரசுக் கட்சி மாத்திரம் இருக்கின்றவர்களை எல்லாம் நீக்கி விடுவோம் எனக் கூறுகின்றது.
இந்நிலையில் ஜெனீவாவின் 60ஆவது கூட்டத்தொடரிலே விஜித ஹேரத், மக்கள் எங்களை அங்கீகரித்துள்ளார்கள். ஆகவே ஒரு நாடு ஒரு தேசத்தின் கீழ்தான் தீர்வைக் கொண்டு வருவோம் என ஹேரத் குறிப்பிட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் தெரிவிக்கையில்…

