கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 1.49 மில்லியன் ரூபாவை மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
கனடாவில் குடியுரிமை பெற்று அங்கு நிரந்தரமாக வசித்து வந்தவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விடயத்தை பயன்படுத்தி சந்தேகநபர் பலரிடம் பண மோசடி செய்துள்ள நிலையில், அதில் பாதிக்கப்பட்ட பத்து பேர் பணியகத்திற்கு வந்து முறைப்பாடு அளித்துள்ளனர்.
பயணத் தடை
செல்லுபடியாகும் அனுமதி இல்லாமல் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக ஆட்சேர்ப்பு செய்வதற்கு பணம் வசூலித்தது மற்றும் மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் விசாரணை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி, பணியகம் இந்த சந்தேக நபர் தொடர்பான உண்மைகளை நீதிமன்றத்தில் தெரிவித்ததுடன், பயணத் தடையையும் விதித்துள்ளது.
மேலும், கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளார்.

