வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் நல்லூர் சங்கிலியன் பூங்கா தொடர்பில் கடிதம் அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தில், “யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியின் கிழக்குப் புறமாக அமையப் பெற்றதே
மேற்குறிப்பிட்ட நல்லூர் சங்கிலியன் பூங்கா 1989 வரை செம்மணி வீதி என்பது
அதற்கு வடக்காக அமைந்துள்ள தேவாலயத்துக்கு எதிராக பருத்தித் துறை வீதி
வரையானதாக இருந்தது.
இதற்கு தெற்காகவும், பருத்தித்துறை வீதிக்கு கிழக்காகவும்
முத்திரை சந்தையும், மாநகர சபையால் வடகைக்கு கொடுக்கப்பட்ட கடைகளும் இருந்தன.
செம்மணி வீதி
1989இல் பருத்தித்துறை வீதியில் இருந்து தேவாலயத்துக்கு நேராகச் சென்ற
செம்மணி வீதியின் பகுதி தெற்குப் பக்கமாக இருந்த தனியார் காணிகளை தெற்கு
எல்லையாகக் கொண்டு தற்போதுள்ளபடி செம்மணி வீதி மாற்றப்பட்டு, நேரான வீதியாக
அமைக்கப்பட்டது.

இதனால் இந்த செம்மணி வீதியின் வடக்காக செட்டியார் தோட்டம் என்று அழைக்கப்படும்
காணியை வடக்கு எல்லையாகக் கொண்ட காணியாக ஒன்றிணைக்கப்பட்டது.
இந்த முழுக்
காணியும் மாநகர சபையின் ஆட்சியின் கீழ் இருந்து வருவது வரலாறு.
1966 ஆம் ஆண்டின் நில அளவை நாயகத்தின் வரைபடத்தின்படி அப்போதே இந்கு சந்தை
இருந்தமை உறுதிப்படுத்தப்படுகிறது. சந்தைகளின் நிர்வாகம் நாடு பூராகவும்
உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரத்திற்குட்பட்டது என்பது சட்டப்படி தெளிவானது.
(நில அளவை வரைபடத்தின் பிரதி இணைப்படு கிறது)
02
இந்தப் பகுதி யாழ்ப்பாண மாநகர சபையின் “சங்கிலி தோப்பு” என்ற பெயரி லான 05 ஆம்
வட்டாரத்தில் அமைந்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

