மட்டக்களப்பில் பாரிய போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட மூவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் 95 கிராம்
ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு கரடியனாறு உறுகாமம்
மற்றும் கொக்குவில் பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்தார்.
போதைப்பொருளுடன் கைது
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மட்டு தலைமையக பொலிஸ் நிலைய
ஊழல் ஒழிப்பு மற்றும் போதை ஒழிப்பு பிரிவினர் கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை 2050 மில்லிக்கிராம் ஐஸ்
போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் மற்றுமொரு நபரை 5 கிராம்
450 மில்லிகிராம் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணை
இதனையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள
உறுகாமம் பகுதியைச் சேர்ந்த நபரின் வீட்டை சுற்றி
வளைத்து சோதனை மேற்கொண்ட போது வீட்டின் கூரையில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறியின்
மேலுள்ள கவசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 90 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

