அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் பேரணி சற்று முன்னர் நுகேகொடை ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் ஆரம்பமாகியுள்ளது.
பெருமளவான மக்களின் பங்குபற்றுதலுடன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதுடன், களத்தில் அதிகளவான மக்கள் காத்திருக்கின்றனர்.
பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட மேலும் பல எதிர்கட்சிகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்துள்ளனர்.
இதில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.





















