எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நாளுக்கு நாள் பரபரப்பான திருப்பங்கள் உடன் சென்று கொண்டிருக்கிறது. ஜனனி கொடுத்த பதிலடியால் குணசேகரன் தரப்பு தற்போது ஆடிப்போய் இருக்கிறது.
போலீஸ் கைதுக்கு பயந்து குணசேகரன் மற்றும் தம்பிகள் தலைமறைவாக காரில் சுற்றிக்கொண்டிருக்கின்றனர். மறுபுறம் அவர்கள் சொத்து பற்றிய உண்மையை குணசேகரனின் அம்மாவிடம் ஜனனி கூறுகிறார்.

இன்றைய ப்ரோமோ
இன்றைய ப்ரோமோவில் குணசேகரனின் அம்மா தான் இத்தனை நாள் பொறுமையாக இருந்தது ஏன் என்கிற காரணத்தை கூறுகிறார். மேலும் ஒரு பெரிய உண்மையும் ஜனனி தரப்புக்கு தெரிய வருகிறது.
மேலும் அறிவுக்கரசி கை உடைந்த நிலையில் வீட்டுக்கு கட்டுடன் வருகிறார். ப்ரோமோவை பாருங்க.

