லண்டனில் கத்திகுத்துக்கு இலக்காகி யாழ் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ் வடமராட்சி கரவெட்டி பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், திருமணமாகி ஒரு வருடமான நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையில் அனுமதி
இந்தநிலையில், லண்டனில் கடந்த 30 ஆம் திகதி கத்திக்குத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இதில் படுகாயமடைந்த குறித்த குடும்பஸ்தர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் லண்டன் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறப்பிடத்தக்கது.

