எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பின் உச்சமாக கடந்த சில வாரங்களாக சென்று கொண்டிருக்கிறது. சக்தி உயிர் பிழைப்பாரா இல்லையா என்பது கேள்விக்குறியாக இருந்த நிலையில் ஜனனி அவரை காப்பாற்றி கொண்டுவந்துவிட்டார்.
அதற்கு காரணமான ஆதி குணசேகரனை கைது செய்ய வேண்டும் என தீவிரமான முயற்சிகளையும் தற்போது அவர் செய்து வருகிறார்.

இன்றைய ப்ரோமோ
இந்நிலையில் தற்போது எதிர்நீச்சல் தொடர்ந்து இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் குணசேகரன் தான் கட்டி வைத்த வீட்டில் பெண்கள் ஜாலியாக பாயை விரித்து செட்டில் ஆகிவிட்டார்கள் என கத்துகிறார். கைதுக்கு பயந்து ஊர் ஊராக தலைமறைவாக சுற்றிக்கொண்டிருக்கும் அவர் இப்படி கோபத்தில் கத்தி இருக்கிறார்.
அதன் பின் அறிவுக்கரசியை வெளியில் அனுப்ப கூடாது இங்கேயே இருக்க வேண்டும் என ஜனனி சொல்கிறார். அதற்கு மாமியார் வேறொரு திட்டத்தை போடுகிறார். என்னவாக இருக்கும்? ப்ரோமோவை பாருங்க.

